இலங்கை

இலங்கை: தெதுரு ஓயாவின் தாழ் நிலப்பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

இன்று பிற்பகல் 3:30 மணி நிலவரப்படி தெதுரு ஓயா நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியதையடுத்து நீர்ப்பாசன திணைக்களம் அம்பர் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் நீர்வரத்து வினாடிக்கு 18,000 கன அடி வீதம் தற்போது வெளியேறும் நிலையில், கசிவு நீர் வெளியேற்றம் மேலும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

தெதுரு ஓயா பள்ளத்தாக்கின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்படக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். வாரியபொல, நிக்கவெரட்டிய, மஹவ, கொபேகனே, பிங்கிரிய, பல்லம, சிலாபம், ஆராச்சிக்கட்டுவ, மற்றும் ரஸ்நாயக்கபுர ஆகிய பிரதேசங்கள் பாதிக்கப்பட்ட பிரதேசங்களாகும்.

இந்த பகுதிகளில் வசிப்பவர்களும், வாகன ஓட்டிகளும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

(Visited 11 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்