இலங்கை

இலங்கை : அரச ஊழியர்களுக்கு சம்பளமற்ற விடுமுறையை வழங்குவது தொடர்பில் பரிசீலனை!

அரச உத்தியோகத்தர்களுக்கு ஓய்வூதியம் பாதிக்காத வகையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சம்பளமற்ற விடுமுறையை வழங்குவது தொடர்பாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் விசேட அறிவித்தல் விடுத்துள்ளது.

அந்தந்த விடுமுறையை அங்கீகரிப்பதில் மாவட்டச் செயலாளர்கள் பின்பற்ற வேண்டிய தொடர் அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜூன் 22, 2022 திகதியிடப்பட்ட பொது நிர்வாக சுற்றறிக்கையின்படி, ஊதியம் இல்லாத விடுப்பு வழங்குவதில் முறைகேடுகளைத் தவிர்ப்பதற்காக தொடர் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அரச உத்தியோகத்தர்கள் சிலர் 05 வருடங்கள் உள்ளூர் விடுப்பு எடுத்து விடுமுறையை இரத்து செய்யாமல் வெளிநாட்டு விடுமுறைக்கு விண்ணப்பித்த சம்பவங்களும் பதிவாகியுள்ள நிலையில் விடுமுறையை அங்கீகரிக்கும் முன்னர் இது தொடர்பில் பரிசீலிக்குமாறு பொது நிர்வாக அமைச்சு மாவட்ட செயலாளர்களுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாட்டு விடுப்பு விண்ணப்பங்களை அனுப்பும் போது, ​​உத்தியோகத்தர்கள் முன்னர் எடுக்கப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விடுமுறைகளை சரிபார்த்து, அட்டையில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!