இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கை 2024 பொதுத் தேர்தல்: ஹரிணி அமரசூரிய பெற்ற வரலாற்று வெற்றி!

நடந்து முடிந்த 2024ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியிலிருந்து கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய 655,289 வாக்குகளைப் பெற்று விருப்பு வாக்குகளுக்கான புதிய சாதனையை படைத்துள்ளார்.

அவர் போட்டியிட்ட கொழும்பு மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

இதற்கு முன்னர் 2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ அதிக விருப்பு வாக்குக்ளாக 527,364 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

இந்நிலையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அதனை முறியடித்து 6 லட்சத்திற்கும் அதிகளவான விருப்பு வாக்குகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய அரசாங்கத்தில் கலாநிதி ஹரிணி அமரசூரிய மீண்டும் பிரதமராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 145,611 விருப்பு வாக்குகளைப் பெற்று வாக்குப் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளள்ளார்.

(Visited 41 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கைக்கு இந்தியா வழங்கிய மகிழ்ச்சியான செய்தி – 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

  • October 5, 2024
இலங்கைக்கு 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை இந்தியா வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள முதலீடுகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன், இந்திய
இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

2 வாரங்களை சிறப்பாக பயன்படுத்திய அனுரகுமார – எரிக்சொல்ஹெய்ம் பாராட்டு

  • October 5, 2024
இலங்கைக்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்கவேண்டும் என இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுரகுமார தெரிவு செய்யப்பட்டு இரண்டு வாரங்களாகின்றன