இலங்கை

கொழும்பு வாழ் மக்களுக்கு விசேட அறிவிப்பு!

கொழும்பின் பல பகுதிகளில் இன்று நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்பத்தலேயில் இருந்து தெஹிவளை வரையிலான பிரதான குழாய்வழியில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக நீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் (NWSDB) அறிவித்துள்ளது.

இதன்படி,

• மொரட்டுவ

• ராவதவத்த

• சொய்சாபுர

• ரத்மலானை

• கல்கிஸ்ஸை

• தெஹிவளை

• வெள்ளவத்தை

• பாமன்கட

• முல்லேரியா

• கொலன்னாவை ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் முழுமையாக தடைப்பட்டுள்ளதுடன்,  பத்தரமுல்ல பகுதியில் வசிப்பவர்கள் குறைந்த அழுத்தத்தில் நீரை பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இன்று நள்ளிரவுக்குள் அனைத்து பகுதிகளுக்குமான நீர் விநியோகத்தை மீட்டெடுக்க எதிர்ப்பார்ப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!