ஐரோப்பா செய்தி

வாக்னர் தலைமை பிரிகோஜின் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிராக தனது தனிப்படையுடன் கிளர்ச்சி செய்த பிறகு, சமரசத்துக்கு வந்த வாக்னர் தலைமை பிரிகோஜின் மீண்டும் செயல்பட துவங்கியுள்ளார்.

சமீபத்தில் அவர் தனது தனிப்பட்ட இராணுவத்தின் எதிர்கால திட்டம் குறித்து பெலாரஸில் இருந்து ஒரு முக்கிய ஆடியோ செய்தியை வெளியிட்டார்.

இது டெலிகிராம் சேனலான Greyzone இல் வெளியிடப்பட்டது. ஆப்பிரிக்கா மற்றும் பெலாரஸில் தனது தனிப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் தொடரும் என்று பிரிகோஜின் தெளிவுபடுத்தினார்.

இல்லை என்றால் தற்போதைக்கு வாக்னர் குழுமத்தில் புதிய நியமனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

வாக்னர் குழுமத்தின் எதிர்காலத் திட்டங்களை நாங்கள் தயாரித்துள்ளோம் என பிரிகோஜின் ஆடியோ செய்தியில் தெரிவித்துள்ளார்.

இவை ரஷ்யாவின் கௌரவத்தை அதிகரிக்கும். “எங்கள் குழுவின் செயல்பாடுகள் ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் பெலாரஸில் உள்ள பயிற்சி மையங்களில் தீவிரமாக இருக்கும்,” என்று அவர் வெளிப்படுத்தினார்.

தற்போது, வாக்னரின் படைகள் பெலாரஸில் உள்ள பழைய இராணுவ தளங்களில் உள்ளன. போலந்து பிரதமர் Matusz Morawiecki சமீபத்தில் வாக்னரின் படைகள் தனது நாட்டின் எல்லையை அடைந்ததாக கூறினார்.

போலந்து ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவில் உறுப்பினராகவும் உள்ளது. ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரஸ் மற்றும் உக்ரைனுடனான பாதுகாப்பு பிரச்சனைகள் குறித்து போலந்து கவலை கொண்டுள்ளது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!