உலகம்

வடகொரியாவின் இரகசிய பகுதிகளை படம் பிடித்த தென்கொரியா! ட்ரோன்கள் பறந்ததால் சர்ச்சை!

தென் கொரியா இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையில் ட்ரோன்களை பறக்கவிட்டதாக வட கொரியாவின் இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.

குறித்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தென்கொரியா மன்னிக்க முடியாத விளைவுகளை சந்திக்க நேரிடும் என வடகொரிய இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வட கொரியாவின் எல்லை நகரத்தின் மீது பறந்து கொண்டிருந்த தென் கொரிய ட்ரோன்களை வீழ்த்த  சிறப்பு மின்னணு போர் உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ட்ரோன்களில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்கள் மூலம் வடகொரியாவின் இரண்டு பகுதிகள் படம்பிடிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் வடகொரியாவின் மேற்படி குற்றச்சாட்டுக்களை தென்கொரிய இராணுவம் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!