உலகம்

30 ஆண்டு கால ஆதிக்கத்தை இழந்த தென்னாப்பிரிக்காவின் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்

தென்னாப்பிரிக்காவின் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் (ANC) கட்சி சுமார் 30 ஆண்டுகளாக இருந்து வந்த பேராதரவை இழந்துள்ளது.

சென்ற வாரம் நடைபெற்ற தென்னாப்பிரிக்கப் பொதுத் தேர்தலில் அக்கட்சிக்கு 40 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தன. ‘அப்பார்த்தைட்’ என்றழைக்கப்படும் இனபேதக் கொள்கைப் பிரச்சினையிலிருந்து மீட்ட ஏஎன்சி 2019ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் 57.5 சதவீதம் வாக்குகளைப் பெற்றது.

இனி அக்கட்சி மற்ற கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியைத்தான் அமைக்க முடியும்.ANC இதுவரை அந்த நிலை ஏற்பட்டதில்லை.

‘நான் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்தக்கூடும்,” என்று ANC தலைவரும் தென்னாப்பிரிக்காவின் சுரங்கங்கள், எரிசக்தி அமைச்சருமான குவெடெ மன்டா‌‌ஷெ கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து சொன்னார். அவர் செய்தியாளர்களிடம் அவ்வாறு கூறியதாக தென்னாப்பிரிக்க ஒலிபரப்பு நிலையம் தெரிவித்தது.

மே மாதம் 29ஆம் திகதின்று தென்னாப்பிரிக்கப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. வாக்குகளை எண்ணும் நடவடிக்கை சனிக்கிழமையனறு (ஜூன் 1) கிட்டத்தட்ட நிறைவடைந்தது.

Mithu

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!