பொழுதுபோக்கு

சூரிக்கு BMW 7 சீரிஸ் சொகுசு காரை பரிசாக கொடுத்த கருடன் தயாரிப்பாளர்..

விடுதலை படத்திற்கு பின் ஹீரோவாக நடித்து வரும் நடிகர் சூரியின் நடிப்பில் கடந்த மாதம் 31ந் தேதி வெளியான திரைப்படம் கருடன். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் இதுவரை ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இப்படம் பெரிய அளவில் வெற்றி பெற காரணமாக இருந்த சூரிக்கு தயாரிப்பாளர் விலை உயர்ந்த பரிசு ஒன்றை கொடுத்துள்ளார்.

பாக்ஸ் ஆபிசிலில் கல்லாக் கட்டிய இத்திரைப்படம், 50 கோடிக்கும் மேல் வசூலை அள்ளியது. இதையடுத்து கருடன் படத்தின் வெற்றி விழாவில் சென்னையில் நடைபெற்றது. இதில், சசிக்குமார், சூரி,இயக்குநர், தயாரிப்பாளர் என பலர் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்டு பேசிய வெற்றிமாறன். சூரி எந்த கேரக்டர் பண்ண வேண்டும் என்றால் அதற்காக மெனக்கெடுவார். அவர் விடுதலை படத்தின் படப்பிடிப்பின் போது, தோளில் காயம் ஏற்பட்டது. அதோடு விடுதலை படத்தில் நடித்தார். அதே வலியோடு தான் கருடன் படத்திலும் கஷ்டப்பட்டு பண்ணி இருக்கார்.

எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதில் என்னுடைய 100 சதவீதத்தை கொடுக்காமல் இருந்து விடக்கூடாது என்று சூரி நினைப்பது ஒரு இயக்குநரான எனக்கு பெரிய மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.

இந்நிலையில், கருடன் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த நடிகர் சூரிக்கு தயாரிப்பாளர் கே. குமார், BMW 7 சீரிஸ் சொகுசு கார் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து ரசிகர்களும் இந்த தகவலை அறிந்து தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் ஒரு படம் வெற்றி பெற்றால் கார் பரிசாக கொடுப்பது இப்போது வழக்கமாகி விட்டதால், கருடன் தயாரிப்பாளரும் சூரிக்கு காரை பரிசாக கொடுத்துள்ளார்.

ew

(Visited 4 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content