ஆஸ்திரேலியா

குறட்டை விடும் கணவர் – 8 வருடங்களாக கணவனை தவிர்க்கும் மனைவி – ஆஸ்திரேலியாவில் சம்பவம்

ஆஸ்திரேலியாவின் கடந்த 8 ஆண்டுகளாக தனது கணவருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளவில்லை என பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கோல்ட் கோஸ்ட்டில் வசிக்கும் மோடல் அழகி கோல் ஜப்பானோவ்ஸ்கி என்பவரே இதனை குறிப்பி்டுள்ளார்.

இரண்டு குழந்தைகளுக்கு தாயான அவர், சமீபத்தில் தனது சமூக ஊடக பக்கத்தில் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், “கடந்த 8 ஆண்டுகளாக ஒரே படுக்கையில் எனது கணவர் ஓர்வலுடன் படுத்து தூங்கவில்லை. அவர் தூங்கும் போது குறட்டை விடுகிறார். அது எனக்கு அசவுகரியமாக உள்ளது. அவர் தூங்குவது விலங்குகள் தூங்குவது போன்று உள்ளது.

இதனால், இரவு நேரத்தில் நானும் எனது குழந்தைகளும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிறோம். என்னாலும் சரியாக தூங்க முடியவில்லை. எனவே இரவு நேரத்தில் என் குழந்தைகளுடன் நான் தனியாக படுத்துக் கொள்கிறேன். என் கணவரின் அருகில் படுக்க மாட்டேன். பரஸ்பர புரிதலுடன் தான் இவ்வாறு செய்கிறேன்.

“இதனால் எனது கணவருக்கும் எவ்வித பிரச்னையும் இல்லை” என்று கூறியிருந்தார்.

அதற்கு ஒருவர் இன்ஸ்டாகிராமில், “கணவரை பிரிந்து படுக்கும் உங்களுக்கும், உங்கள் கணவருக்கும் இடையிலான உறவு எப்படி இருக்கிறது?” என்று கேட்டார். அதற்கு அவர், எங்களுக்குள் உறவு சரியாக இல்லை தான் என குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் ஒருவருக்கொருவர் புரிதலுடன் வாழ்ந்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

குறட்டை விடுவதால், தனது கணவருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளாத மாடல் அழகியை பலரும் பலவிதமாக விமர்சித்து வருகின்றனர்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித

You cannot copy content of this page

Skip to content