பொழுதுபோக்கு

தீபக்கிடம் நடிக்க வாய்ப்பு கேட்ட சிவகார்த்திகேயன்…

விஜய், ஜீ தமிழ், சன் டிவி என நிறைய தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து மக்களை வெகுவாக கவர்ந்திருக்கிறார் தீபக். கடைசியாக இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் தொடரில் நாயகனாக நடித்து பிரபலமானார்.

அந்த சீரியல் முடிவுக்கு வந்த பின் தற்போது தீபக் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 8வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார்.

தீபக் போன்று தான்  சிவகார்த்திகேயனும் விஜய் டிவியில் மிமிக்ரி கலைஞர் ஆக அறிமுகமாகி பின் தொகுப்பாளராக பணிபுரிந்து தற்போது முன்னணி கதாநாயகனாக தனது உழைப்பாலும், திறமையாலும் முன்னேறி வந்தவர்.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் குறித்து பேட்டி ஒன்றில் தீபக் பேசியது தற்போது வைரலாகி வருகிறது.

அதில், ” நான் சீரியலில் நடித்து கொண்டிருந்தபோது என்னிடம் சிவகார்த்திகேயன் சீரியலில் நடிக்க வாய்ப்பு கேட்டார்.

ஆனால், நான் அப்போது மறுத்துவிட்டேன். நான் அவரிடம் சீரியல் எல்லாம் உனக்கு செட் ஆகாது நீ படத்தில் நடிக்கும் பணியை மட்டும் பாரு என்று கூறினேன்.

அந்த காலத்தில் எல்லாம் சீரியலில் நடித்தால் படங்களில் நடிக்க முடியாது. அதனால் தான் அவ்வாறு கூறினேன்.

பின், ஒரு நிகழ்ச்சியில் நானும் சிவகார்த்திகேயனும் கலந்து கொண்டோம் அப்போது மேடையில் அவர் இது குறித்து பேசும்போது தான் எனக்கு நான் கூறியது நினைவுக்கு வந்தது. அதற்கு சிவா என்னிடம் நன்றியும் தெரிவித்தார்” என்று பேசியுள்ளார்.

(Visited 17 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!