இலங்கை செய்தி

வாகனம் வாங்க விரும்புவோருக்கான அதிர்ச்சி தகவல்

வாகன இறக்குமதியின் போது விதிக்கப்படும் 50 வீத மேலதிக வரி நடைமுறையை, எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல்களின் கீழ் இந்த வரி விதிக்கப்பட்டிருந்தது.

தற்போது அந்த நடைமுறை 2026 ஆம் ஆண்டின் இறுதி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட வாகனங்களுக்கு இந்த 50 வீத மேலதிக வரி தொடர்ந்தும் விதிக்கப்படும்.

வெளிநாட்டு செலாவணியை முகாமைத்துவம் செய்யும் நோக்குடன் இந்த வரி விதிப்பு காலம் நீடிக்கப்பட்டுள்ளதாகத் கூறப்படுகிறது.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!