பொழுதுபோக்கு

தனது மரணம் குறித்து மனம் திறந்தார் ஷாருக்கான்…

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உச்ச நட்சத்திரத்தில் ஒருவராக இருக்கிறார்.

கடைசியாக இவர் நடிப்பில் வெளியான டங்கி. இதில் வித்தியாசமாக நடித்திருப்பார். படம் முழுக்க முழுக்க காமெடியாக இருக்கும். இந்த நிலையில் சுவிட்சர்லாந்தில் நடந்த லொகார்னோ திரைப்பட விழாவில் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

இவர் இந்த விருதைப் பெரும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். பின் விருதைப் பெற்ற அவர், தன்னை விருதுக்கு தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து தனது பேச்சைத் தொடங்கினார்.

நிருபர் பல கேள்விகள் கேட்க, அவை ஒவ்வொன்றுக்காக பதிலளித்த ஷாருக்கான் ஒரு கேள்வியைப் பார்த்து வியப்படைந்ததோடு, தனது கடைசி ஆசையையும் வெளிப்படுத்தினார். நடிகர் ஷாருக்கானிடம் நீங்கள் எப்போதும் நடித்துக் கொண்டே இருக்க விரும்புகிறீர்களா என நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்க்கு பதிலளித்த ஷாருகான். “ஆம், நான் மரணிக்கும் நாள் வரை நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். எனக்கு யாராவது ஆக்‌ஷன் சொல்ல வேண்டும். அப்போது நான் இறப்பது போல் நடிக்க வேண்டும். ஆனால், ஆக்‌ஷன் சொன்னவர் கட் சொல்லும்போது நான் மீண்டும் எழுந்திருக்கக் கூடாது.

நான் அப்படியே இறந்து போயிருக்க வேண்டும். இதுதான் எனது வாழ்நாள் கனவு எனக் கூறி அனைவரையும் நெகிழ வைத்துள்ளார் இதன்மூலம் தனது தொழில் மீது அவர் கொண்டிருக்கும் ஆழமான காதல் தான் வெளிப்படுகிறது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!