பொழுதுபோக்கு

கனவு படத்தை எடுக்க முடியாமல் தவிக்கும் சங்கர்… அந்தர் பல்டி அடித்த லைக்கா

பல வருடங்களுக்கு முன்பே வேள்பாரி கதையின் ரைட்சை சு வெங்கடேசன் இடமிருந்து சங்கர் வாங்கிவிட்டார். இந்த கதைக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்த்து ஒரு பெத்த தொகைக்கு அதை வாங்கி வைத்து விட்டார். இது அவருடைய கனவு படமாக இருக்கிறது.

கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படத்தை மூன்று பாகங்களாக எடுக்கவும் திட்டமிட்டு இருந்தார். இதற்காக இரண்டு ஹீரோக்களையும் மனதில் தேர்ந்தெடுத்து வைத்துள்ளார்.

சூர்யா மற்றும் ரன்வீர் சிங் போன்ற ஹீரோக்களை வைத்து இந்த படத்தை எடுக்க திட்டம் தீட்டினார்.

இந்த படத்திற்கு ஒரு வருடம் தேவைப்படும் என்பதால் முன்னணி ஹீரோக்கள் அனைவரும் பின்வாங்கினார்கள். இதனால் சங்கர் இந்தியன் 2 ,இந்தியன் 3, கேம் சேஞ்சர் போன்ற படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.

இந்த படங்களை முடித்துவிட்டு வேள்பாரி கதையை ஆரம்பிக்கலாம் என மனக்கோட்டை கட்டி வந்தார்.

துரதிஷ்டமாக அவர் எடுத்த அத்தனை படங்களும் சமீபத்தில் அவருக்கு எமனாய் வந்து நின்றது. இந்த படங்களை தயாரித்த லைகா நிறுவனத்திற்கு பெரிய நஷ்டமும் ஏற்பட்டது. 400 கோடி பொருட்செளவில் எடுக்கப்பட்ட இந்தியன் 2 படம் மோசமான அடியை கொடுத்தது.

இது ஒரு பக்கம் இருக்க கேம் சேஞ்சர் படமும் அவருக்கு எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதனால் இப்பொழுது இந்தியன் 3 எடுப்பதற்கு சம்பள பாக்கியும் வைத்து விட்டார்கள் லைகா.

வேள்பாரி கதையை சங்கர், லைகா நிறுவனத்தை வைத்து தான் திட்டம் போட்டு வந்தார். ஆனால் அதுவும் இப்பொழுது கோவிந்தா போட்டுள்ளது.

(Visited 62 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்