பொழுதுபோக்கு

1000 கோடியை அள்ளிய ‘ஜவான்’… ஷாருக்கான் வாரி வழங்கிய சம்பள விவரம் இதோ

இயக்குனர் அட்லீ, பாலிவுட்டில் அறிமுகமான திரைப்படம் தான் ஜவான். இப்படத்தில் நடிகர் ஷாருக்கான் நாயகனாக நடித்ததோடு, தனது ரெட் சில்லீஸ் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்தும் இருந்தார்.

கடந்த செப்டம்பர் 7-ந் தேதி திரைக்கு வந்த இப்படம் மாஸான வரவேற்பை பெற்று வருவதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.1000 கோடி வசூலை வாரிக்குவித்துள்ளது. இந்த நிலையில் இப்படத்தில் நடிக்க பிரபலங்கள் வாங்கிய சம்பளம் பற்றி பார்க்கலாம்.

இப்படத்திற்காக அட்லீக்கு ரூ.30 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாம். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் தன் சம்பளத்தை ரூ.50 கோடியாக உயர்த்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா, ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகி இருக்கிறார். கோலிவுட்டில் ஒரு படத்துக்கு ரூ.5 கோடி சம்பளமாக வாங்கி வந்த நயன்தாராவுக்கு ஜவான் படத்திற்காக ரூ.10 கோடி சம்பளமாக வழங்கி இருக்கிறார் ஷாருக்.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோனேவும் ஜவான் படத்தில் ஒரு மாஸான ரோலில் நடித்திருந்தார். ஆக்‌ஷன் காட்சிகளிலும் அதகளம் செய்திருந்த தீபிகா படுகோனேவுக்கு சின்ன ரோலாக இருந்தாலும், அதில் நடிக்க அவருக்கு ரூ.20 கோடி சம்பளமாக வழங்கப்பட்டதாம்.

ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் மாஸான வில்லனாக எண்ட்ரி கொடுத்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. இப்படத்தில் வில்லனாக நடிக்க அவருக்கு ரூ.21 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

ஜவான் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய் சேதுபதிக்கு பாலிவுட்டில் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

பிரியாமணி, ஜவான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதோடு இப்படத்தில் ஷாருக்கான் உடன் சேர்ந்து குத்தாட்டமும் ஆடி இருந்த பிரியாமணிக்கு ரூ.2 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளது.

நகைச்சுவை நடிகர் யோகிபாபுவும் ஜவான் படத்தில் ஷாருக்கான் உடன் சேர்ந்து நடித்திருந்தார். இப்படத்தில் கம்மியான சம்பளம் வாங்கிய நடிகரும் அவர்தான். அவருக்கு ரூ.35 லட்சம் மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளது. ஜவானுக்கு முன்னதாக சென்னை எக்ஸ்பிரஸ் படத்திலும் ஷாருக்கான் உடன் சேர்ந்து நடித்திருந்தார் யோகிபாபு.

(Visited 16 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!