இலங்கை செய்தி

மசாஜ் என்ற போர்வையில் பாலியல் தொழில் – 11 பேர் கைது

பொலன்னறுவை – ஹபரணை பிரதேசத்தில் ஆயுர்வேத மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த நான்கு மசாஜ் நிலையங்களை சுற்றிவளைத்து நான்கு முகாமையாளர்கள் உட்பட 11 பெண்கள் கைது செய்யப்பட்டதாக பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.

ஹிகுராக்கொட நீதிமன்றில் தேடுதல் உத்தரவு கிடைக்கப்பெற்றதன் பின்னர் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலன்னறுவை பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவு நிலைய கட்டளைத் தளபதி தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட நான்கு முகாமையாளர்களும் மொனராகலை, சிகிரியா, கம்பஹா, மஹியங்கனை ஆகிய பிரதேசங்களை வசிப்பவர்கள் எனவும், அவர்கள் 19 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலன்னறுவை கோட்டாச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் 19, 27, 33, 47, 33, 48 வயதுடைய திம்புலாகல தலுகானை, ஹபரணை, களனி, மொனராகலை, பூனானி, அனுராதபுரம் மற்றும் வெல்லவாய பிரதேசங்களில் வசிக்கும் பெண்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த முகாமையாளர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்களுக்கு குறைந்த பணத்தை கொடுத்து அதிக பணம் சம்பாதித்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன் இந்த மசாஜ் நிலையங்கள் நீண்டகாலமாக இயங்கி வருவதும் தெரியவந்துள்ளது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!