பாடசாலை கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து குதித்த மாணவி

கண்டியில் உள்ள பெண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயது மாணவி ஒருவர் பாடசாலை கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து குதித்துள்ளார்.
காயமடைந்த மாணவி கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மாணவி நேற்று (08) காலை 11.30 மணியளவில் பாடசாலையில் அமைந்துள்ள கட்டிடமொன்றில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தரையில் குதித்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவன் பாடசாலையின் மாணவர் தலைவராகவும் கடமையாற்றி வருவதுடன்இ கடுகஸ்தோட்டை களுகமுவ வத்த பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மாணவிக்கு ஞாபக மறதி நோய் இருப்பதாக மாணவியின் பெற்றோர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.