10 ட்ரோன்களை இடைமறித்து அழித்துள்ளதாக சவூதி அறிவிப்பு
சவூதி அரேபியா கடந்த சில மணித்தியாலங்களில் 10 ட்ரோன்களை இடைமறித்து அழித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் சமூக ஊடகங்களில் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைட் உட்பட வளைகுடாப் பகுதியின் பிற நாடுகளும் நேற்றிரவு தாக்குதல்கள் நடந்ததாக அறிவித்துள்ளன.
கடந்த 24 மணித்தியாலங்களில் முக்கிய உட்கட்டமைப்புகள் மீது பல தாக்குதல்கள் நடைபெற்றதால் தொடர்ச்சியான போராட்டங்களையும் மோதல்களையும் ,டுபாய் எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





