இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த சஜித்!
இலங்கைக்கு அவசரகால எரிபொருள் உதவியை வழங்கிய இந்தியாவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது நன்றியினைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது உத்தியோகபூர்வ ‘X’ பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
“அவசரகால எரிபொருள் உதவிகளை வழங்கிய இந்தியாவிற்கு நாங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
உறவுகள் என்பவை வசதியான காலங்களில் அல்ல, மாறாக நெருக்கடியான காலங்களிலேயே சோதிக்கப்படுகின்றன என்பதை இது நினைவூட்டுகின்றது. இக்கட்டான சூழலில் எமக்குத் துணையாக நின்றவர்களை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.




