இலங்கை செய்தி

ஒரு பில்லியன் ரூபா நட்டஈடு கோரி சஜித் பிரேமதாசவின் மனைவி கடிதம்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் மனைவி, ஜலனி பிரேமதாச, ஊடகவியலாளர் சாமுதித சமரவிக்ரமவிடம் ஒரு பில்லியன் ரூபா நட்டஈடு கோரி தனது சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பியுள்ளார்.

அவர் நடத்தும் இணைய ஊடகம் மூலம் தன்னை அவமதிக்கும் வகையில் விவாதம் நடத்தப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சமுதித சமரவிக்கிரம பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும், இல்லையெனில் 14 நாட்களுக்குள் ஒரு பில்லியன் ரூபா நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என அந்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

பணம் தராவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஜலனி பிரேமதாசவின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!