பொழுதுபோக்கு

திருமணமான நடிகருடன் ரிலேஷன்ஷிப்பில் சாய் பல்லவி…??

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சாய் பல்லவி திருமணமான நடிகருடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக செய்திகள் பரவி வருகின்றன.

பிரேமம் படம் மூலம் மலர் டீச்சராக இளசுகள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர் தான் சாய் பல்லவி.

இவரை தமிழ் திரையுலகம் பக்கம் அழைத்து வந்தார் இயக்குனர் ஏ.எல்.விஜய். அவர் இயக்கிய தியா படம் மூலம் கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார் சாய் பல்லவி.

பின்னர் தனுஷுக்கு ஜோடியாக மாரி 2, சூர்யாவுடன் என்.ஜி.கே என முன்னணி நடிகர்களுடன் நடித்து கோலிவுட்டில் படிப்படியாக முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

சாய் பல்லவி தற்போது நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அமரன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். கமல் தயாரித்துள்ள இப்படம் இந்த ஆண்டு தீபாவளி விருந்தாக திரைக்கு வருகிறது.

ஹீரோயின்கள் என்றாலே அவர்களை சுற்றி சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இருக்காது. அப்படி அமரன் படத்தின் பூஜையின் போது அப்படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி அருகே மாலையுடன் சாய் பல்லவி நின்ற புகைப்படத்தை பகிர்ந்து, இருவரும் திருமணம் செய்துகொண்டதாக கடந்தாண்டு செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விஷயம் காட்டுத் தீ போல் பரவியதால், நடிகை சாய் பல்லவியே அது வெறும் வதந்தி என உறுதி செய்தார்.

இந்த நிலையில், தற்போது அவரைப்பற்றிய மற்றுமொரு கிசுகிசு டோலிவுட் வட்டாரத்தில் பரவத் தொடங்கி இருக்கிறது.

அதன்படி நடிகை சாய் பல்லவி, திருமணமாகி குழந்தைகளுக்கு அப்பாவாக இருக்கும் நடிகர் ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக பிரபல தெலுங்கு ஊடகம் செய்தி வெளியிட்டு பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

சிலர் அந்த நடிகர் யார் என ஆராயத் தொடங்கினாலும், அவரது ரசிகர்கள் வழக்கம்போல் இதுவும் வதந்தியாகத் தான் இருக்கும் என கூறி வருகின்றனர்.

(Visited 11 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!