இலங்கை

புட்டின் அனுப்பிய தனிப்பட்ட செய்தியுடன் இலங்கை ஜனாதிபதியை சந்தித்தார் ரஷ்ய தூதர்!

ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் தனிப்பட்ட செய்தியுடன் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை சந்தித்துள்ளார்.

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் Levan S. Dzhagaryan இன்று (01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியை சந்தித்து இந்தச் செய்தியைப் பெற்றுக்கொண்டார்.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் மற்றும் ஜனாதிபதி திரு அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பில், இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிடுகிறது.

இருதரப்பும் பரஸ்பரம் தூதரக உறவுகளை மேம்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தின.

வர்த்தகம், முதலீடு, கலாச்சாரம் மற்றும் கல்வி போன்ற முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை இரு தரப்பும் மேலும் வலியுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!