ஐரோப்பா

உக்ரைனின் கார்கிவை குறிவைத்து தாக்கிய ரஷ்யா : பலர் உயிரிழப்பு!

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் மீது ரஷ்ய ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்கிவ் பிராந்திய ஆளுநர் ஓலே சினிஹுபோவ் இந்த தகவலை அறிவித்துள்ளார்.

ஈரானில் தயாரிக்கப்பட்ட ஷாஹெட் ட்ரோன் நகரின் நெமிஷ்லியான் மாவட்டத்தில் உள்ள குடிமக்களின் உள்கட்டமைப்பைத் தாக்கியதாகவும், இதனால் 15 வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ரஷ்யாவால் ஏவப்பட்ட 31 ஈரானிய ஷாஹெட் ட்ரோன்களில் 23 விமானங்களை வான் பாதுகாப்பு அமைப்புகள் அழித்ததாக உக்ரேனிய விமானப்படை தெரிவித்துள்ளது.

ட்ரோன்கள் முதன்மையாக வடகிழக்கு கார்கிவ் பகுதியையும், தெற்கு மாகாணமான ஒடேசாவையும் குறிவைத்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!