செய்தி விளையாட்டு

5வது டெஸ்ட் போட்டியில் இருந்து ரோகித் சர்மா விலகல்

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர்- கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் முதலாவது டெஸ்டில் இந்தியாவும், 2வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. 3வது டெஸ்ட் மழையால் ‘டிரா’ ஆனது. மெல்போர்னில் நடந்த 4வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 184 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை தொடங்குகிறது.

இந்த நிலையில், இந்த டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா விலகியுள்ளார். இதனால் இந்திய அணி கேப்டனாக பும்ரா செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த தொடரில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய ரோகித் சர்மா, டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது .

(Visited 27 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி