ஐ,டி.எஃப் தயாரித்த அறிக்கை : லெபனான் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும்!
லெபனானில் உள்ள ஏராளமான இடங்களுக்கு இஸ்ரேலிய இராணுவம் புதிய வெளியேற்ற உத்தரவுகளை இன்று பிறப்பித்துள்ளது.
தெற்கு பெய்ரூட்டின் இரண்டு சுற்றுப்புறங்களில் வசிப்பவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“லெபனானில் வசிப்பவர்களுக்கு, குறிப்பாக பெயர்கள் காட்டப்பட்டுள்ள கிராமங்களில் உள்ளவர்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ள இஸ்ரேல், அங்கிருக்கும் மக்கள் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேற வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
சுமார் 50 கட்டிடங்களுக்கு இவ்வாறு வெளியேற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேலின் ஐ.டி.எஃப் தயாரித்துள்ள பட்டியலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கியஸ்தர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். அவர்களை அழிக்கும் நோக்கத்துடன் இஸ்ரேல் செயற்பட்டு வருகின்ற நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.





