இலங்கை

திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளில் பிராந்திய சுனாமி உருவகப்படுத்தல் பயிற்சி!

திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள கரையோர சமூகங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் தயார்நிலையின் அளவை சோதிக்கும் வகையில் பிராந்திய சுனாமி உருவகப்படுத்துதல் பயிற்சி நாளை (04.10) நடைபெறவுள்ளது.

பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ இன்று (03.10) பாராளுமன்றத்தில் இதனை அறிவித்தார்.

இலங்கையில் தேசிய மட்டத்தில் இருந்து கிராம மட்டம் வரை ஏற்படுத்தப்பட்டுள்ள சுனாமி முன்னெச்சரிக்கை பொறிமுறைகளை மதிப்பீடு செய்யும் நோக்கில் அனர்த்த முகாமைத்துவ நிலையம் இந்த பயிற்சியை முன்னெடுத்து வருவதாக பிரதி சபாநாயகர் தெரிவித்தார்.

அத்துடன், கரையோர மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் கோரிக்கை விடுத்துள்ளதாக பிரதி சபாநாயகர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், தீவை பாதித்துள்ள மோசமான வானிலை காரணமாக, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 26,000 ஐ எட்டியுள்ளது.

மழையினால் இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, கம்பஹா, மாத்தறை, காலி, நுவரெலியா, புத்தளம், குருநாகல் மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!