இலங்கை செய்தி

ரவிராஜ் படுகொலை: வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவ

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில், மூன்று கடற்படை புலனாய்வு அதிகாரிகள் உள்ளிட்ட எதிரிகளின் விடுதலையை ரத்து செய்துள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் புதிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக சட்டமா அதிபர் செய்த மேல்முறையீட்டைத் தொடர்ந்து, நீதியரசர்களான பி. சசி மகேந்திரன் மற்றும் அமல் ரணராஜா ஆகியோர் அடங்கிய அமர்வு, நேற்று (28) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜைப் படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டியது, அவரது மரணத்திற்குக் காரணமானது, மற்றும் அப்போது அவருடன் பயணம் செய்த காவலர் லக்ஸ்மனை கொலை செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில், பிரதிவாதிகள் மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

குற்றம்சாட்டப்பட்டவர்களில் மூன்று பேர் கடற்படை புலனாய்வு அதிகாரிகளாவர்.

இந்த வழக்கு 2016-ஆம் ஆண்டில் ஒரு சிறப்பு நடுவர் மன்றத்தின் முன் விசாரிக்கப்பட்ட நிலையில், குற்றம்சாட்டப்பட்ட அனைவரும், ஒருமனதாக விடுவிக்கப்பட்டனர்.

இந்த விசாரணை நடைமுறையில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி, சட்டமா அதிபர், நடுவர் மன்றத்தின் அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்தார்.

நீதிபதியின் வழிகாட்டுதல்கள் நள்ளிரவு வரை நீடித்ததாகவும், விசாரணை இரவு சுமார் 11:00 மணி வரை தொடர்ந்ததாகவும், நள்ளிரவுக்குச் சற்றுப் பின்னர் தீர்ப்பு வழங்கப்பட்டதாகவும் சட்டமா அதிபர் குறிப்பிட்டிருந்தார்.

பதிவேடுகளை ஆய்வு செய்த பின்னர், வழக்கை முன்னெடுத்துச் செல்லப் போதுமான சான்றுகள் இருப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்து, பிரதிவாதிகளின் விடுவிப்புத் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டதுடன், இந்த வழக்கை மேல்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரிக்கவும் உத்தரவிட்டது.

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!