பொழுதுபோக்கு

ரவி – ஆர்த்தி விவகாரத்து வழக்கு : நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

நடிகர் ரவி – ஆர்த்தி தம்பதியினரிடையே கடந்த 2009 -ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதலால், பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு நடிகர் ரவி , சென்னை குடும்பல நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், சமரச தீர்வு மையத்தில் இருவரும் 3 முறைக்குமேல் நேரில் ஆஜராகி பேச்சு வார்த்தை நடத்தினர்.

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சமரச பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தர் அழைத்திருப்பதாக, இருவரது வழக்கறிஞர்களும் நீதிபதியிடம் தெரிவித்தனர்.

இதனையடுத்து, சமரச பேச்சுவார்த்தை நிறைவு பெற்ற பின்னர், வழக்கு விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார். மேலும், வழக்கு விசாரணையை பிப்ரவரி மாதம் 15 -ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

(Visited 35 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!