பொழுதுபோக்கு

பிக் பாஸ் ரஞ்சித் இப்படிப்பட்டவரா? உண்மையை உடைத்த மனைவி…

ரஞ்சித் பிக் பாஸ் வீட்டிற்குள் போவதற்கு முன் கவுண்டம்பாளையம் என்ற படத்தின் மூலம் பல சர்ச்சைகளில் சிக்கி நெகட்டிவ் விமர்சனங்களை வாங்கினார்.

அதே மாதிரி உள்ளே போனதும் அவருடைய பாஷை படி தங்கம், அம்மணி என்று சில வார்த்தைகளால் பேசும்பொழுது வெளியே நக்கல் அடித்து ட்ரோல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

அத்துடன் தர்ஷா புடவை கட்டி வரும் பொழுது ரஞ்சித் பார்த்த பார்வைக்கு தவறு இருக்கிறது என்று இதற்கும் சேர்த்து ட்ரோல் பண்ண ஆரம்பித்து விட்டார்கள்.

இதனைத் தொடர்ந்து மூன்றாவது ட்ரோலாக ரவீந்தர் உடன் சேர்ந்து ரஞ்சித் பிராங்க் பண்ணிய பொழுது அனைவரும் உண்மை என்று நம்பி விட்டார்கள். இதனால் பெண்கள் மிகவும் பயந்து போய் விட்டார்கள். ஆனால் கடைசியில் இது எல்லாம் சும்மா என்று தெரிந்தவுடன் சௌந்தர்யா மற்றும் ஜாக்லின் என்னது அண்ணா என்று ரஞ்சித்தை பார்த்து கேள்வி கேட்டார்கள்.

உடனே ரஞ்சித், சௌந்தர்யா நெற்றியில் ஒரு முத்தத்தை கொடுத்து ஜாக்லின் கன்னத்தை பிடித்தார். இதையும் சேர்த்து ட்ரோல் பண்ணும் அளவிற்கு ரஞ்சித்தை வச்சு செய்தார்கள். தற்போது இந்த மூன்று ட்ரோலுக்கும் பதிலளிக்கும் விதமாக ரஞ்சித்தின் மனைவி பிரியா ராமன் வெளியே தொடர்ந்து பேட்டிகளை கொடுத்து வருகிறார்.

See also  லீக்கான அந்தரங்க வீடியோ.. ஓவியா கொடுத்த ஷாக்கிங் பதில்

அதில் அவர் கூறியது பார்க்கும் பொழுது ரஞ்சித் உண்மையிலே தங்கமான மனுசர். அவர் மீது பிரியாராமன் ரொம்ப நம்பிக்கையும் பாசத்தையும் வைத்திருக்கிறார் என்பது போல் தெரிகிறது. அத்துடன் அவர் சொன்னது அவங்க ஊர் பாசப்படி தான் ரஞ்சித் வெளியே எப்படி இருந்தாரோ அதே மாதிரி தான் உள்ளேயும் பேசிக் கொண்டிருக்கிறார்.

வீட்டிலேயும் டிரைவர் சமையல் பண்றவங்க கூட அவர் அப்படித்தான் பேசுவாங்க. டிரைவர், சமைக்கிறவங்க என்ற வார்த்தை கூட அவர் யூஸ் பண்ண மாட்டார். அந்த அளவிற்கு எல்லோரிடமும் அவர் அன்பை வெளிப்படுத்தும் விதமாக தங்கம், அம்மணி என்ற வார்த்தைகளை தான் யூஸ் பண்ணி பேசுவார் என்று கூறியிருக்கிறார்.

அதற்காக இந்த வார்த்தைகளை தவறான கண்ணோட்டத்தை பார்த்து அவர் மீது தேவையில்லாத பழி போட வேண்டாம். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அடுத்ததாக தர்ஷவை தவறான கண்ணாடத்துடன் ரஞ்சித் பார்த்தது என்று சொல்வது எனக்கு ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் தனிப்பட்ட முறையில் தர்ஷா மற்றும் ரஞ்சித் இருவருமே செந்தூரப்பூவே என்ற நாடகத்தின் மூலம் பழகி இருக்கிறார்கள்.

See also  அப்போலோ மருத்துவமனைக்கு ரஜினி குடும்பம் பில் கட்டவில்லையா?

அதுபோக ரஞ்சித் பாக்க கூடிய அளவுக்கு தர்ஷா ஒன்றும் இல்லை. அவருடைய நோக்கமும் பார்வையும் தப்பில்லை நீங்கள் பார்க்கும் பார்வை தான் தவறாக இருக்கிறது என்று பதிலடி கொடுத்திருக்கிறார். அடுத்ததாக அவர் பிராங்க் பண்ணிய பொழுது முழுசாக நம்பி பயந்து போனது சௌந்தர்யா மற்றும் ஜாக்லின் தான். அதனால் அவர்களுடைய பயத்தை கம்மி பண்ணுவதற்காக அப்பா குழந்தைகளுக்கு முத்தம் கொடுப்பது போல் தான் நெற்றியில் கொடுத்து ஜாக்கலினை அரவணைத்தார்.

இதிலும் எந்தவித தவறும் இல்லை நிச்சயம் ரஞ்சித் பற்றி தெரிந்தவர்களுக்கு இந்த உண்மை புரியும். அத்துடன் ரஞ்சித்தின் முத்தம் தவறான முத்தம் இல்லை அப்பா மகளுக்கு கொடுக்கிற முத்தம் போல் தான் இருந்தது என்று தெள்ளத் தெளிவான பதிலை கொடுத்திருக்கிறார். கடைசியாக ரவீந்தருக்கு உதவி பண்ணி தான் நமக்கு வெளியே பேர் வாங்க வேண்டிய அவசியம் இருக்கிறது என்ற நிலைமை ரஞ்சித்துக்கு கிடையாது.

அவர் எத்தனையோ விருதுகளையும் பேரும் புகழையும் சம்பாதித்து விட்டு தான் போயிருக்கிறார். அந்த வகையில் அவருடைய உண்மையான குணமே மற்றவர்கள் கஷ்டப்படும் போது அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே தான் இருக்கும். அதனால்தான் ரவீந்தர் உடல் ரீதியாக கஷ்டப்படும்போது முதல் ஆளாக ரஞ்சித் நின்னு உதவி செய்திருக்கிறார் என்று பேட்டி கொடுத்திருக்கிறார்.

See also  வளர்த்த சாமியை விட்டுவிட்டு ஏற்றிவிட்ட சாமியை தொற்றிய நெல்சன் மற்றும் கவின்

(Visited 1 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content