பொழுதுபோக்கு

12 ஏக்கரில் பிரம்மாண்ட மருத்துவமனை கட்டும் ரஜினிகாந்த்? யாருக்கு தெரியுமா?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சென்னையில் 12 ஏக்கரில் மருத்துவமனை ஒன்றை கட்டி அதில் ஏழை எளிய மக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

இதனிடையே நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை திருப்போரூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். அங்கு அவர் புதிதாக வாங்கி இருக்கும் நிலத்துக்கான பத்திரப்பதிவு நடைபெற்றது.

அப்போது ரஜினிகாந்த் வருவதை அறிந்து அவரைக் காண அங்கு ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

இந்த நிலையில், தற்போது ரஜினிகாந்த் அங்கு வந்ததன் பின்னர் குறித்த தகவல் கசிந்துள்ளது. அதன்படி சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் இருந்து தாழம்பூர் செல்லும் வழியில் 12 ஏக்கரில் நிலம் ஒன்றை வாங்கி இருக்கிறாராம் ரஜினி.

அதற்காக பத்திரப்பதிவு செய்வதற்காக தான் திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகம் வந்துள்ளார் ரஜினி. மேலும் அந்த இடத்தில் பிரம்மாண்ட மருத்துவமனை ஒன்றை கட்டும் முடிவில் இருக்கிறாராம் ரஜினிகாந்த்.

அந்த மருத்துவமனையில் ஏழை எளிய மக்களுக்கு உயர்தரத்தில் இலவச சிகிச்சை அளிக்க உள்ளாராம். அதே நேரத்தில் வசதிவாய்ந்தவர்களுக்கு பணம் வசூலிக்கவும் உள்ளதாக கூறப்படுகிறது.

அந்த மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது என்றும், தற்போது தான் ஷூட்டிங்கில் பிசியாக இருப்பதால், அந்த கட்டுமான பணிகளை உடன் இருந்து கவனித்துக் கொள்ள தன் நண்பர் ஒருவரை ரஜினி நியமித்து உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!