இந்தியா

பொற்கோயிலில் உணவு தயாரிக்கும் பணியாளர்களுக்கு உதவியாக காய்கறிகளை சுத்தம் செய்த ராகுல் காந்தி!

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சீக்கியா்களின் புனித தலமான அமிருதசரஸ் பொற்கோயிலில் இரண்டாவது நாளாகவும் பல்வேறு சேவைகள் செய்து வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார்.

பஞ்சாபில் உள்ள பொற்கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை சென்ற ராகுல் காந்தி, அங்குள்ள உணவுக் கூடத்தில் பக்தர்கள் உபயோகித்த தண்ணீர் குவளைகள், தட்டுகளை சுத்தம் செய்தார்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக பொற்கோயிலில் உணவு தயாரிக்கும் பணியாளர்களுக்கு உதவியாக காய்கறிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார்.

பஞ்சாப் மாநிலத்தில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் காங்கிரஸ் எம்எல்ஏ சுக்பால் சிங் கைரா கைது செய்யப்பட்ட நிலையில் காங்கிரஸுக்கும் ஆம் ஆத்மிக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.

மாநிலத்தின் காங்கிரஸ் தலைவா்கள் சிலா் ஆம் ஆத்மியுடன் மக்களவைத் தோ்தலில் கூட்டணியைத் தொடர வேண்டாம் என வலியுறுத்திவரும் நிலையில் ராகுல் காந்தி பயணம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

TJenitha

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!