பொழுதுபோக்கு

த்ரிஷாவுக்கே டஃப் கொடுக்கும் ரக்ஷிதா… அப்படி என்ன செஞ்சிருக்காங்கனு பாருங்க…

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிரிவோம் சந்திப்போம்’ என்கிற தொடர் மூலம் தமிழில் அறிமுகமானவர் ரக்ஷிதா மஹாலக்ஷ்மி. கருப்பு பெண்ணாக இந்த சீரியலில் நடித்ததால்… பலரும் இவர் கருப்பாக இருக்க கூடிய நடிகை என்றே நினைத்த நிலையில், பல வருடங்களுக்கு பின்னர் தான் இவர் கருப்பு நிறத்தில் தன்னை காட்டிக்கொள்ள மேக்கப் போட்டு நடித்தார் என்று தெரியவந்தது.

மேலும் இந்த கதாபாத்திரம் தனக்கு மிகவும் பிடித்திருந்ததால், கருப்பான தோற்றத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் ரக்ஷிதா தெரிவித்திருந்தார்.

இந்த சீரியலுக்கு பின்னர், சன் டிவியில் ஒளிபரப்பான ‘இளவரசி’ தொடரில் நடித்தார். இதை தொடர்ந்து மீண்டும் விஜய் டிவியில் துவங்கப்பட்ட ‘சரவணன் மீனாட்சி’ சீசன் 2 தொடரில் நடிக்க துவங்கினார்.

சரவணன் கேரக்டரில் நடித்த பல நடிகர்கள் அடுத்தடுத்து மாறிய போதும், மீனாட்சி கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடித்து வந்தார் ரக்ஷிதா.

மேலும் ‘பிரிவோம் சந்திப்போம்’ சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த, தினேஷ் என்பவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சீரியலில் இவர் நடித்து வந்த நிலையில், பல சின்னத்திரை பிரபலங்கள் பொறாமை கொள்ளும் அளவிற்கு, ஒற்றுமையாக வாழ்ந்து வந்தது இந்த ஜோடி. இடையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, ஒரு கட்டத்தில் முற்றியதால் தற்போது விவாகரத்தில் வந்து நிற்கிறது.

தினேஷ் ரக்ஷிதாவுடன் வாழ விருப்பம் தெரிவித்து வரும் நிலையில், ஏனோ சில காரணங்களால் ரக்ஷிதா தொடர்ந்து அவருடன் வாழ மறுத்து வருகிறார்.

சமீபத்தில் கூட, தினேஷ் மீது ரக்ஷிதா பொய் புகார் கொடுத்ததாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.

தன்னை சுற்றி பல பிரச்சனைகள் இருந்தாலும் பெரிதாக அதை கண்டுகொள்ளாமல், தான் உண்டு தன்னுடைய வேலை உண்டு என இருக்கும் ரக்ஷிதா… தற்போது த்ரிஷாவுக்கே டஃப் கொடுக்கும் விதத்தில், ஆந்தையின் உருவத்தை நெஞ்சில் டாட்டூ குத்திகொண்டுள்ளார். இதுகுறித்த புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

(Visited 29 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!