பொழுதுபோக்கு

புஷ்பா2: சமந்தாவுக்குப் பதிலாக ஃபிக்ஸ் ஆன நடிகை… சம்பளம் எவ்வளவு தெரியுமா?

’புஷ்பா2’ படத்தில் நடிகை சமந்தாவுக்குப் பதிலாக கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கப் போகும் நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த 2021ல் வெளியான படம் ‘புஷ்பா’. இந்தப் படத்தில் நடித்ததற்காக நடிகர் அல்லு அர்ஜூனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கொடுக்கப்பட்டது. அதேபோல, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கும் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது கிடைத்தது. இந்தப் படத்தில் நடிகை சமந்தா ‘ஓ சொல்றியா மாம…’ பாடலுக்கு முதல்முறையாக ஐட்டம் நம்பர் பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். ஆக்‌ஷன் காட்சிகளை விடவும் இதுபோல, ஐட்டம் நம்பர் பாடலுக்கு நடனமாடுவதுதான் கடினம் என இதன் அனுபவத்தையும் அப்போது சொல்லி இருந்தார் சமந்தா. இந்தப் பாடல் இப்போது வரையும் இளைஞர்களின் ஹிட் லிஸ்ட்டில் உள்ளது.

Not Rs 1.5 crore, Samantha charged Rs 5 crore for Oo Antava song from Allu  Arjun's Pushpa? - India Today

அப்படி இருக்கையில், ‘புஷ்பா2’ இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வெளியாவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இரண்டாவது பாகத்தில் சமந்தாவே ஆடப்போகிறாரா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர். ஆனால், அவருக்குப் பதிலாக ஸ்ரீலீலா அந்த இடத்தைப் பிடித்திருக்கிறார்.

சமீபத்தில் வெளியான ‘குண்டூர் காரம்’ படத்தில் ஸ்ரீலீலாவின் நடனத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஒரு படத்தில் நடிக்க இரண்டு கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் ஸ்ரீலீலா, இந்தப் பாடலுக்கே இரண்டு கோடி ரூபாய் சம்பளம் வாங்க இருக்கிறாராம். சமந்தா ‘ஓ சொல்றியா…’ பாடலுக்காக ஐந்து கோடி வாங்கியதாக அப்போது செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

 

(Visited 1 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content