இஸ்ரேலிய ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு – அவுஸ்திரேலியா முழுவதும் வெடித்த போராட்டம்
இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் (Isaac Herzog) வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் இன்று அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்ட நிலையில் சிட்னியில் போராட்டக்காரர்கள், பலஸ்தீன ஆதரவு கோஷங்களை எழுப்பினர்.
இஸ்ரேலிய ஜனாதிபதி ஹெர்சாக் காசாவில் இடம்பெற்ற நிகழ்வுகளுக்கு உடந்தையாக இருந்தார் என குற்றம் சுமத்தினர்.
இந்நிலையில் ஹெர்சாக்கின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் பொலிஸார் போராட்டக்காரர்கள் சிலரை கைது செயததுடன் , கண்ணீர் புகை பிரயோகமும் மேற்கொண்டனர்.
இதேவேளை, இதற்கு மாறாக, ஆயிரக்கணக்கான யூத சமூக உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள், பொண்டி தாக்குதலில் உயிரிழந்தோருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வில் ஹெர்சாக்கை வரவேற்றனர்.





