இலங்கை செய்தி

டிட்வா சூறாவளி இழப்பீடு வழங்குவதில் சிக்கல்

டிட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐந்து இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும் திட்டத்திலிருந்து விலகுவதாகக் கிராம உத்தியோகத்தர்கள் அறிவித்துள்ளனர்.

அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய சுற்று நிருபத்தில் பல குறைபாடுகள் உள்ளதாகவும், இதனால் இழப்பீடுகளைத் தீர்மானிப்பதில் கிராம உத்தியோகத்தர்கள் கடும் நெருக்கடிகளை எதிர்கொள்வதாகவும் இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள சங்கத்தின் தலைவர் நந்தன ரணசிங்க, முறையான வழிகாட்டல்கள் இன்றி இந்தப் பணிகளைத் தொடரப்போவதில்லை என திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

கிராம உத்தியோகத்தர்களின் இந்த முடிவால், சேதமடைந்த வீடுகளுக்கான இழப்பீடுகளைப் பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

Puvan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!