மண்டேல்சனின் தூதுவர் நியமனம் – முழு பொறுப்பையும் பிரதமர் ஏற்க வேண்டும்
அமெரிக்க தூதுவராக பீட்டர் மண்டேல்சனை நியமிப்பதில் பிரதமர் ஸ்டாமர் நல்லெண்ணத்துடனேயே செயல்பட்டார் என அமைச்சரவை அமைச்சர் பாட் மெக்ஃபேடன் (Pat McFadden)தெரிவித்துள்ளார்.
எப்ஸ்டீன் தொடர்பான சம்பவம் தொடர்பில் பிரதமர் அதிர்ச்சியடைந்ததாகவும் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோரினார் என்றும் அமைச்சர் கூறினார்.
அத்துடன் பிரதமர் எந்தவிதமான திடீர் நடவடிக்கையும் எடுக்க வேண்டியதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் தலைமை அலுவலகத்தில் நடந்த தற்போதைய விமர்சனங்கள் மற்றும் அழுத்தங்களுக்கு பின்னர் அமைச்சர் பாட் மெக்ஃபேடன் (Pat McFadden) இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதமர் எந்த முடிவையும் எடுத்தாலும், அதற்கான முழு பொறுப்பு அவரே ஏற்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.





