இந்தியாவின் அசாம் மாநிலத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் 5.8 ரிக்டர் அளவுக்கோலில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.
இது குவஹாத்தி அருகே ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் தீவிரம் வடக்கு வங்காளத்திலும் அண்டை நாடான பூட்டானிலும் உணரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலநடுக்கம் நாட்டில் சுமார் 5 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது, இதுவரை காயங்கள் அல்லது சொத்து சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.





