பொழுதுபோக்கு

ஐயோ சாமி போதும்….. ஓட்டமெடுத்த அரச குடும்பத்தினர்! காரணம் தெரியுமா?

இயக்குனர் மணிரத்தினத்தின் படங்களில் ஹீரோ மற்றும் ஹீரோயின்கள் எப்போதுமே அழகாக காண்பித்து இருப்பார்.

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என்போரை அரச அரசிகளாக கண்முன் காட்டி இரண்டு பாகங்களாக உருவாகி இருந்தது. இப்படமும் நல்ல வசூலை பெற்றது.

இந்நிலையில் மணிரத்தினத்தின் செல்லப் பிள்ளைகளான பொன்னியின் செல்வன் ஹீரோக்கள் அவருக்கு டாட்டா காண்பித்து சென்றுள்ளனர்.

பொதுவாக ஒரு ஹீரோக்கள் ஒரு படத்திலிருந்து மற்றொரு படத்தில் நடிக்கும் போது இடைவெளி எடுப்பார்கள். அந்த கதாபாத்திரத்தில் இருந்து வெளிவர வேண்டும் என்றால் சிறிது ஓய்வு வேண்டும். இதற்காக சுற்றுலா செல்வதை பலர் வழக்கமாக வைத்துள்ளனர். அதுவும் பொன்னியின் செல்வன் ஹீரோக்கள் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளனர்.

எளிதில் அதிலிருந்து வெளிவருவது சாதாரண விஷயமல்ல. மேலும் மணிரத்தினத்திடமிருந்து விடிவு காலம் கிடைத்ததால் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி ஆகிய மூன்று பேரும் தலை தெரிக்க ஓடி உள்ளனர்.

பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்த விக்ரம் தனது மகன் துருவ் விக்ரம் மற்றும் குடும்பத்துடன் இன்பச் சுற்றுலாவாக லண்டன் சென்றுள்ளார்.

அடுத்ததாக கதையின் நாயகன் அருள்மொழி வர்மனாக நடித்த ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தி மற்றும் குழந்தைகளுடன் சிங்கப்பூர் சென்றுள்ளார். அதாவது இப்போது விடுமுறை நாட்கள் என்பதால் குடும்பத்துடன் நேரம் செலவிட வேண்டும் என்பதற்காக ஜெயம் ரவி அங்கு சென்று இருக்கிறார்.

மேலும் பொன்னியின் செல்வன் படத்தில் வந்தயத்தேவனாக இளம்பெண்களை கவர்ந்த கார்த்தி தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்றிருக்கிறார். இவ்வாறு பொன்னியின் செல்வன் ஹீரோக்கள் தங்களது குடும்பத்துடன் வெளிநாடு பறந்துள்ளனர்.

(Visited 19 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்