உலகம்

மெக்சிகோவில் காவல் துறை அதிகாரிகள் கடத்தப்பட்டனர்!

மெக்சிகோவின் சியாபாஸ் மாநிலத்தில் 14 மாநில காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (27.06) இடம்பெற்றுள்ளது.

இது குறித்து  சியாபாஸ் மாநிலத்தின் குடிமக்கள் பாதுகாப்பு செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்  ’14 அதிகாரிகள் அனைவரும் ஆண்கள் என்றும்,  அவர்களைக் கண்டுபிடிக்க வான் மற்றும் தரைப்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர், தெரிவிக்கையில்,  சியாபாஸின் தலைநகரை நோக்கி காவல்துறை அதிகாரிகள் பயணம் செய்த போது டிரக் வண்டியில் வந்த ஆயுதம் ஏந்திய நபர்கள் அவர்களை கடத்தி சென்றனர். அந்த டிரக் வண்டியில் இருந்த பெண்கள் இறக்கிவிடப்பட்டனர்” எனத் தெரிவித்தார்.

இதேவேளைஅண்மைக்காலமாக குவாத்தமாலா – மெக்சிகோ எல்லைப் பகுதியில் மோதல் போக்கு அதிகரித்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

(Visited 21 times, 1 visits today)

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!