பொழுதுபோக்கு

வெளிநாட்டில் பார்ட்டி.. இணையத்தை கலக்கும் அனிதா விஜயகுமாரின் புகைப்படங்கள்

தமிழ் திரையுலகில் முன்னணி குணச்சித்திர நடிகராக வலம் வந்தவர் விஜயகுமார். இவருக்கு இரண்டு மனைவிகள்.

இதில் இரண்டாவது மனைவியான நடிகை மஞ்சுளா கடந்த 2013-ம் ஆண்டு இறந்துவிட்டார். இதனால் தற்போது தனது மூத்த மனைவியான முத்துக்கண்ணு உடன் வாழ்ந்து வருகிறார் விஜயகுமார்.

விஜயகுமாருக்கு மொத்தம் ஆறு பிள்ளைகள். இதில் கவிதா, அனிதா மற்றும் அருண் விஜய் ஆகியோர் விஜயகுமாரின் மூத்த மனைவியான முத்துக்கண்ணுக்கு பிறந்தவர்களாவர். அதேபோல் வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி ஆகியோர் இரண்டாவது மனைவி மஞ்சுளாவிற்கு பிறந்த மகள்கள் ஆவர்.

விஜயகுமாரின் 5 மகள்களின் வனிதா, கவிதா, ஸ்ரீதேவி, பிரீத்தா ஆகிய நான்கு பேருமே சினிமாவில் நடித்துள்ளனர். அதேபோல் விஜயகுமாரின் மகன் அருண் விஜய்யும் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். விஜயகுமாரின் வாரிசுகளில் சினிமா பக்கம் தலைகாட்டாத ஒருவர் என்றால் அது அனிதா மட்டும் தான்.

டாக்டருக்கு படித்துள்ள அனிதா விஜய்குமாருக்கு தற்போது 50 வயது ஆகிறது. சினிமா மீது ஆர்வம் காட்டாத இவர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

தோஹாவில் குடும்பத்தோடு வசித்து வரும் அனிதா, கடந்த மாதம் தான் சென்னைக்கு வந்து இங்கு பல கோடி மதிப்பில் கட்டிய வீட்டுக்கு பால் காய்ச்சினார்.

சுமார் ஒரு மாதங்களுக்கு மேல் சென்னையில் இருந்த அனிதா, கடந்த வாரம் மீண்டும் தோஹாவுக்கு சென்றுவிட்டார். அங்கு வேலையில் பிசியாக இருந்த அனிதா, தற்போது தன்னுடைய வெளிநாட்டு தோழிகளுடன் சேர்ந்து பார்ட்டிக்கு சென்றிருக்கிறார்.

அப்போது எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் அனிதா. அந்த புகைப்படங்களில் 50 வயது பியூட்டியாக ஜொலிக்கிறார் அனிதா.

(Visited 24 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்