இலங்கையில் உச்சம் தொடும் வெப்பநிலை – மக்களுக்கு எச்சரிக்கை!

இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் வெப்பமான வானிலை குறித்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
இதன்படி நாளைய (05.05) தினம் வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் சில இடங்களில் வெப்பச் சுட்டெண், மனித உடலால் உணரப்படும் அதிக அவதானம் செலுத்தப்பட வேண்டிய நிலையில் இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேபோல் மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் வெப்பச் சுட்டெண் “கவனம்” கோரும் மட்டத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
(Visited 12 times, 1 visits today)