உலகம்

அமைதி ஒப்பந்தம் அமுல் – மீண்டும் காஸாவுக்குத் திரும்பும் பாலஸ்தீனர்கள்

காசாவில் போர் ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாலஸ்தீனர்கள் மீண்டும் அங்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர்.

போரினால் இருப்பிடத்தை இழந்த ஆயிரக்கணக்கான மக்களே இவ்வாறு தமது சொந்த இடங்களை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளனர்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தத்தின் முதற்கட்ட உடன்பாடு நடைமுறைக்கு வந்துள்ளது.

அது பல பாலஸ்தீனர்களுக்கு ஆறுதல் அளித்திருக்கிறது. அதே சமயம் அடுத்து என்ன நடக்கும் என்ற அச்சமும் உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்ரேலும் ஹமாஸும் அமைதி உடன்பாட்டை எட்டியிருப்பதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

2 ஆண்டுகளாக நீடிக்கும் காஸா போர் விரைவில் முடிவுக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதிலிருந்து காசா போர் தீவிரம் அடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 38 times, 1 visits today)

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்