செய்தி விளையாட்டு

ஆசிய கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளும் பாகிஸ்தான் அணி

2025.ம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேசம் பந்த் வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 135 ஓட்டங்கள் எடுத்தது. முகமது ஹாரிஸ் 31 ஓட்டங்களும், முகமது நவாச் 25 ஓட்டங்களும் எடுத்தனர்.

வங்கதேசம் சார்பில் தஸ்கின் அகமது 3 விக்கெட்டும், மெஹிதி ஹசன், ரிஷாத் ஹொசைன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது.

ஷமிம் ஹொசைன் அதிகபட்சமாக 30 ஓட்டங்கள் எடுத்தார். சைப் ஹசன் 18 ஓட்டங்கள் எடுத்தார்.

இறுதியில், வங்கதேசம் 20 ஓவரில் 124 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

(Visited 5 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி