இலங்கை செய்தி

200 மெட்ரிக் தொன் உதவிப் பொருட்களை கையளித்தது பாகிஸ்தான்!

பாகிஸ்தான் அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட மனிதாபிமான உதவித் தொகை இலங்கையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக சர்வதேச கொள்கலன் முனையத்தில் வைத்து இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

அமைச்சர் அநுர கருணாதிலக மற்றும் துறைமுகங்கள் மற்றும் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு ஆகியோர் உதவிப் பொருட்களை பொறுப்பேற்றனர்.

பாகிஸ்தான் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் மனிதாபிமான உதவித் தொகையை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

பாகிஸ்தானின் தேசிய அனர்த்த முகாமைத்துவ அதிகாரசபை மற்றும் பிரதமர் அலுவலகத்துடன் ஒருங்கிணைந்து சுமார் 200 மெட்ரிக் தொன் மனிதாபிமான உதவிகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

குறித்த உதவித் தொகையில் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு தங்குமிடம் மற்றும் கூடாரங்கள் உட்பட மேலும் பல பொருட்கள் இடம்பெற்றுள்ளன.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!