செய்தி

பிரான்ஸில் சிறைச்சாலைகளில் நிரம்பி வழியும் கைதிகள் – நெருக்கடியில் அதிகாரிகள்

பிரான்ஸில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ள நிலையில் கைதிகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.

சிறைச்சாலைகளில் சிறைவைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் வெளியான புள்ளிவிபரங்களுக்கமைய, இந்த விடயம் தெரியவந்துள்ளது.

மே மாதம் முதலாம் திகதி மேற்கொள்ளப்பட்ட இறுதி கணக்கெடுப்பின் படி பிரான்ஸில் தற்போது 77,647 பேர் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 6.1% சதவீதம் அதிகமாகும். அதேவேளை, ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி நிலவரப்படி 77,450 கைதிகள் சிறைவைக்கப்பட்டிருந்தனர்.

பிரான்ஸில் தற்போது 3,405 கைதிகள் மெத்தையினை தரையில் போட்டுக்கொண்டு உறங்குவதாகவும், பிரான்ஸில் மொத்தமாக 61,966 கைதிகளுக்கான இடங்கள் மாத்திரமே உள்ளதாகவும், 16,000 இற்கும் அதிகமான கைதிகள் மேலதிகமாக சிறைவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் தவிர, 17,558 கைதிகள் இலத்திரனியல் காப்புகளுடன் விடுதலை செய்யப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி