தெரிவுக்குழுவின் தலைமைப் பதவி எதிரணிக்கு வேண்டும்!
தித்வா புயலினால் ஏற்படும் பேரிடர் தொடர்பில் வளிமண்டளவியல் திணைக்களத்தால் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தப்பட்டதா என்பது பற்றி ஆராய்வதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய ஐக்கிய குடியரசு முன்னணி தலைவர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
மேற்படி குழுவின் தலைமைப் பதவி எதிரணிக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.
“ வளிமண்டளவியல் திணைக்களத்துக்கு விஞ்ஞானப்பூர்வமான தகவல்கள் நவம்பர் 24, 25 ஆம் திகதிகளில் கிடைத்திருக்கும் என நம்புகின்றேன். எனவே, தேசிய அனர்த்த நிலையை பிரகடனப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இழப்புகளை குறைத்திருக்கலாம்.
இந்நிலை தொடர்பில் வளிமண்டளவியல் திணைக்களத்தால் ஜனாதிபதி செயலர் ஊடாக ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தப்பட்டதா, அவ்வாறு தெரியப்படுத்தி இருந்தால் ஏன் முன்னாயத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை,
தெரியபடுத்தவில்லையெனில் அதற்குரிய காரணம் என்ன என்பன பற்றி ஆராய்வதற்கே மேற்படி தெரிவுக்குழு அவசியம்.” எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டார்.





