பொழுதுபோக்கு

பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார்

பழம்பெரும் நடிகை புஷ்பலதா சென்னையில் காலமானார். அவருக்கு வயது 87.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என ஏராளமான மொழிப் படங்களில் நடித்து கவனம் பெற்றவர் நடிகை புஷ்பலதா. கடந்த 1958-ம் ஆண்டு தமிழில் வெளியான ‘செங்கோட்டை சிங்கம்’ படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட நடிகர்களுடன் 100-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

ரஜினியின் ‘நான் அடிமை இல்லை’, கமல்ஹாசனின் ‘கல்யாணராமன்’, ‘சகலகலா வல்லவன்’ உள்ளிட்ட படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

‘நானும் ஒரு பெண்’ படத்தில் ஏ.வி.எம்.ராஜனுடன் நடித்தபோது புஷ்பலதாவுக்கும் – ராஜனுக்கும் காதல் மலர்ந்தது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

கடைசியாக 1999-ம் ஆண்டு முரளி நடிப்பில் வெளியான ‘பூவாசம்’ படத்தில் நடித்திருந்தார் புஷ்பலதா. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வயது மூப்பு காரணமாக அவர் காலமானார். அவருக்கு வயது 87. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!