ஓமான் கடற்பரப்பில் எண்ணெய் டேங்கர் கப்பல் மீது தாக்குதல்!
ஓமான் கடற்பரப்பிற்கு அருகில் பயணித்த கப்பல் ஒன்றின் மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டின் கடல்சார் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.
இதில் 04 பேர் காயமடைந்துள்ளதுடன், 20 பேர் கொண்ட குழுவினர் கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“ஸ்கைலைட்” என்று அழைக்கப்பட்ட அந்தக் கப்பல் மேற்கு பசிபிக் பகுதியில் உள்ள நாடொன்றுக்கு பயணித்ததாக கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்தி
ஈரான் விவகாரம் : பாகிஸ்தானில் வெடித்த போராட்டம் – 06 பேர் உயிரிழப்பு!





