ஈரான் விவகாரம் : பாகிஸ்தானில் வெடித்த போராட்டம் – 06 பேர் உயிரிழப்பு!

ஈரானின் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தானில் போராட்டம் வெடித்துள்ளது. தலைநகர் கராச்சியில்  உள்ள அமெரிக்க தூதரகத்தை நூற்றுக்கணக்கான ஷியா முஸ்லிம் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ளனர். கூட்டத்தைக் கலைக்க அதிகாரிகளும் துணை ராணுவப் படையினரும் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதாக காவல்துறை அதிகாரி முகமது ஜவாத் (Mohammad Jawad)  கூறினார். இதில் 06 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.