தேசிய சட்டமன்றத்திற்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் வடகொரியா!
வடகொரியா தனது தேசிய சட்டமன்றத்திற்கான பிரதிநிதிகளைத் இன்று தேர்ந்தெடுக்கும் என்று மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிம் ஜாங் உன் (Kim Jong Un) ஜனாதிபதியாக நியமிக்கப்படுவாரா என்பது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ( கிம்மின் தாத்தாவான கிம் இல் சுங் ( Kim Il Sung) நீண்டகாலமாக அந்த பதவியை வகிந்து வந்துள்ளார்)
இது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஆளும் தொழிலாளர் கட்சியின் உச்சிமாநாட்டிற்குப் பிறகு வருகிறது. அத்துன் குறித்த கூட்டமானது இராஜதந்திரம் முதல் போர் திட்டமிடல் வரை அனைத்திலும் அரசு முயற்சிகளை வழிநடத்துகிறது.
தென் கொரியாவை ஒரு “விரோதமான” தனி நாடு என்று வரையறுத்து, அந்தக் கருத்தை சட்டத்தில் குறியீடாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.





