இலங்கை

மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் நியமனம் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவராக மற்றுமொரு முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மையில் கூடிய அரசியலமைப்பு சபையில் இது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், இந்த வாரம் அரசியலமைப்பு பேரவை கூட்டம் நடைபெறும் திகதி தொடர்பில் இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு மேலதிகமாக, தற்போது தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவராக உள்ள சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவாவும் ஆணைக்குழுவின் ஏனைய ஆணையாளர்களில் அடங்குவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இதுவரை புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை.

இந்த ஆணைக்குழுக்களுக்கான புதிய உறுப்பினர்களை நியமிப்பது மிக விரைவில் நடைபெறும் என அரசியல் நிர்ணய சபை முன்னதாக அறிவித்திருந்தது

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!